நவமணிமாலை
From Tamil Wiki
நவமணிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். நவமணிமாலை(நவம் - ஒன்பது) என்னும் சொல் ஒன்பது மணிகளைச் சேர்த்துக் கோர்த்த மாலை எனப் பொருள். இதற்கு ஏற்ப, வெண்பா முதலாகிய ஒன்பது வகையான பாக்களும் பாவினங்களும் சேர்ந்து அமைந்த சிற்றிலக்கியம் நவமணிமாலை. இது அந்தாதியாக பாடப்படும்[1].
குறிப்புகள்
- ↑
வெண்பா முதலா வேறோர் ஒன்பது
நண்பாக் கூறல் நவமணி மாலை- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 837
உசாத்துணைகள்
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
- https://www.tamilvu.org/slet/l0B36/l0B36d11.jsp?id=204
இதர இணைப்புகள்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.