கிருஷ்ணையர்
From Tamil Wiki
கிருஷ்ணையர் (பொ.யு. 19ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமையில் பாடல்கள் பாடினார்.
வாழ்க்கைக் குறிப்பு
கிருஷ்ணையர் மயூரம் என்னும் ஊரில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
கிருஷ்ணையர் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் பாடினார்.
விவாதம்
மயூரம் அவையாம்பிகை சதகம் பாடியவரும், பொ.யு.19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுபவருமான மயூரத்தினையடுத்த நல்லதுக்குடி கிருட்டிணையரும், திருவையாறு முத்துசாமி பாரதியாரின் விசுவபுராணத்திற்கு உரை கண்டவருமான மயிலாடுபுரம் கிருட்டிணையரும்(1884) ஒருவரா, இருவரா அல்லது மூவரா என்பதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை.
நூல் பட்டியல்
- சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.