சங்கர நாராயண விலாசம்
From Tamil Wiki
சங்கர நாராயண விலாசம் மராட்டியர் ஆட்சி காலத்தில் இயற்றிய நாடக நூல்.
நூலாசிரியர்
இந்நூலின் ஆசிரியர் ஆபத்சகாய பாரதி.
காலம்
மோடி ஆவணக் குறிப்பில் இடம்பெற்றுள்ள, “ஆரவி - சங்கரநாராயண விலாச நாடகம் - பூர்வகசிவ விஷ்ணு சரித்திர (பக்கம் 48)” என்னும் குறிப்பின் மூலம் இந்நூல் சாகேஜி மன்னரின் காலத்தில் இயற்றப்பட்டது தெரிகிறது. சாகேஜி மன்னரின் காலம் பொ.யு. 1684 - 1712.
சுவடி
இந்நூலின் சுவடி தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் தெலுங்கு நாடகப் பிரிவில் ‘சங்கர நாராயணக் கல்யாணம்’ என்னும் பெயரில் படியெடுக்கப்பட்டுள்ளது. ’சங்கர நாராயண விலாசமும்’, ‘சங்கர நாராயணக் கல்யாணமும்’ ஒன்றா அல்லது இரு வேறு நூல்களா எனத் தெரியவில்லை.
உசாத்துணை
- மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.