மஞ்சேரி எஸ். ஈச்வரன்
மஞ்சேரி எஸ். ஈச்வரன் (மஞ்சேரி சுந்தர்ராமன் ஈச்வரன்) (ஜூன் 16, 1910 - டிசம்பர் 12, 1966) கவிஞர், எழுத்தாளர், இதழாளர். மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர், வரலாற்றாசிரியர், திரைப்படக் கதை-வசன ஆசிரியர். தமிழிலும், ஆங்கிலத்திலும், சம்ஸ்கிருதத்திலும் எழுதினார். தேசியப் புத்தக அறக்கட்டளையின் (நேஷனல் புக் ட்ரஸ்ட்) செயலாளராகவும் முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார். ஆங்கிலத்தில் எழுதிய இந்தோ-ஆங்கில எழுத்தாள முன்னோடிகளுள் ஒருவர்.
பிறப்பு, கல்வி
மஞ்சேரி சுந்தர்ராமன் ஈச்வரன் என்னும் மஞ்சேரி எஸ். ஈச்வரன், ஜூன் 16, 1910-ல், தஞ்சாவூரில் பிறந்தார். தந்தை சுந்தர்ராமன். மஞ்சேரி எஸ். ஈச்வரன், தந்தையின் பணி நிமித்தம் கேரள மாநிலம் மஞ்சேரியில் வளர்ந்தார். அங்கு பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
மஞ்சேரி எஸ். ஈச்வரன் மணமானவர். மனைவி அன்னபூர்ணா ஈச்வரனும் ஓர் எழுத்தாளர். ‘விஷ்ணு சர்மாவின் பஞ்சதந்திரக் கதைகள்' உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். மகன் பிரகாஷ் ஈச்வரன் பொறியாளர். தனியார் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் இயக்குநர்.
இலக்கிய வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.