being created

தொண்டை மண்டல சதகம்

From Tamil Wiki

தொண்டை மண்டல சதகம் (பொ.யு. 17-ஆம் நூற்றாண்டு) படிக்காசுப் புலவர் இயற்றிய சதகம் என்னும் சிற்றிலக்கிய வகை. தொண்டை மண்டலத்தில் நாட்டுப்புறப் பகுதியில் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளைத் தொகுத்து எழுதிய நூல்.

ஆசிரியர்

தொண்டை மண்டல சதகத்தை இயற்றியவர் படிக்காசுப் புலவர். துறவறம் மேற்கொண்டதால் படிக்காசுத் தம்பிரான் என்றும் அழைக்கப்பட்டார். மாமண்டூர் கறுப்பு முதலியாரின் வேண்டுகோளுக்கிணங்க 'தொண்டை மண்டல சதகம்' இயற்றினார். மாமண்டூரில் கற்றோர் மத்தியில் தொண்டை மண்டல சதகம் அரங்கேற்றப்பட்டபோது படிக்காசுப்புலவரை பல்லக்கில் ஏற்றி அப்பல்லக்கை கறுப்பு முதலியார் தானும் சுமந்தார் என்று படிக்காசுப் புலவர் சரிதத்தின் பின்வரும் பாடலிலிருந்து அறிய வருகிறது

கன்மாரி காத்த முகிற் கத்தூரி அருண்மாவைக் கருப்பனென்று
மின்மாரி தனது கிளையத்தனையுஞ் சபை கூட்டி வியந்து கேட்டு
சொன்மாரி பொழிந்திடவே சிரகரம்பிதஞ்செய்து சுருளுந்தந்து
பொன்மாரி பொழிந்து தந்த பல்லக்குஞ் சுமந்து மிகுபுகழ் பெற்றானே

நூல் அமைப்பு

தொண்டை மண்டலத்தில் நாட்டுப்புறப் பகுதியில் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளைத் தொகுத்து எழுதிய நூல் இது. தொண்டை மண்டலத்தின் எல்லைகளாக

மேற்குப் பவளமலை வேங்கடம் நேர் வடக்கால்
ஆர்க்க முவரியனி கிழக்குப் - பார்க்குளுயர்
தெற்குப் பினாகி திகழிருப தன் காதம்
நற்றொண்டை நாடெனவே நாட்டு

நூலின் மூலம் அறியவரும் செய்திகள்

திருக்குறளின் உரையாசிரியர்களில் ஒருவரான பரிமேலழகர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார் என்பது இந்நூலிலிருந்து அறியப்படுகிறது. இச்சதகத்தின் 41-வது செய்யுள்

திருக்காஞ்சி வாழ் பரிமேலழகன் வள்ளுவர் நூற்கு வழிகாட்டினான்

என்று கூறுவதிலிருந்து இதனை அறியலாம்.

நூலில் குறிப்பிடப்பட்ட தொண்டை மண்டல சான்றோர்கள்
நூலில் குறிப்பிடப்பட்ட தொண்டை மண்டல மன்னர்கள்
  • அதியமான்
  • கறுப்பன்
  • சடையப்பன்
  • மாரி கண்டன் மற்றும் பலர்.

இலக்கிய இடம்/சிறப்புகள்

தொண்டை மண்டல சதகம் தொண்டை நாட்டைப்பற்றிய சமூக, வரலாற்று செய்திகளை அறியத் தருகிறது. பரிமேலழகர் தொண்டை மண்டலத்தில் வாழ்ந்தவர் போன்ற செய்திகள் அறிய வருகின்றன.

பாடல் நடை

மாடுகள் வாங்க சிறந்த தினம்

உத்திரமுன்றினோடு மோணமாதிசையிலேடுஞ்‌
சித்தினாமகத்தினோடுஞ்‌ சிதர்ததோர்கிட்டச்தோடும்‌
கொத்துடனகன்றுகாலி குறைவறச்கொள்வீசாகில்‌
அத்திரஞ்செல்லச்செல்ல ஆண்டினில்மாண்டுபோமே,

திருவாலங்காடு

இன்னும்புகழ்கிற்க வூர்பழிக்காம லெழுபதின்மர்‌
துன்னுந்தழல்புக்‌ கொளித்ததெல்லாஞ்சுரு திப்பொருளா
யுன்னும்ம்புரிசைத்‌ திருவாலங்காட்டி. னுரைபஇக
மன்னுக்தமிழில்‌ வகுத்ததன்றோதொண்டை மண்டலமே

உசாத்துணை

தொண்டை மண்டல சதகம்,மதுரைத் திட்டம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.