being created

தொண்டை மண்டல சதகம்

From Tamil Wiki
Revision as of 14:23, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

தொண்டை மண்டல சதகம் (பொ.யு. 17-ஆம் நூற்றாண்டு) படிக்காசுப் புலவர் இயற்றிய சதகம் என்னும் சிற்றிலக்கிய வகை. தொண்டை மண்டலத்தில் நாட்டுப்புறப் பகுதியில் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளைத் தொகுத்து எழுதிய நூல்.

ஆசிரியர்

தொண்டை மண்டல சதகத்தை இயற்றியவர் படிக்காசுப் புலவர். துறவறம் மேற்கொண்டதால் படிக்காசுத் தம்பிரான் என்றும் அழைக்கப்பட்டார். மாமண்டூர் கறுப்பு முதலியாரின் வேண்டுகோளுக்கிணங்க 'தொண்டை மண்டல சதகம்' இயற்றினார். மாமண்டூரில் கற்றோர் மத்தியில் தொண்டை மண்டல சதகம் அரங்கேற்றப்பட்டபோது படிக்காசுப்புலவரை பல்லக்கில் ஏற்றி அப்பல்லக்கை கறுப்பு முதலியார் தானும் சுமந்தார் என்று படிக்காசுப் புலவர் சரிதத்தின் பின்வரும் பாடலிலிருந்து அறிய வருகிறது..

கன்மாரி காத்த முகிற் கத்தூரி அருண்மாவைக் கருப்பனென்று

மின்மாரி தனது கிளையத்தனையுஞ் சபை கூட்டி வியந்து கேட்டு

சொன்மாரி பொழிந்திடவே சிரகரம்பிதஞ்செய்து சுருளுந்தந்து

பொன்மாரி பொழிந்து தந்த பல்லக்குஞ் சுமந்து மிகுபுகழ் பெற்றானே

நூல் அமைப்பு

தொண்டை மண்டலத்தில் நாட்டுப்புறப் பகுதியில் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளைத் தொகுத்து எழுதிய நூல் இது. தொண்டை மண்டலத்தின் எல்லைகளாக

மேற்குப் பவளமலை வேங்கடம் நேர் வடக்கால்

ஆர்க்க முவரியனி கிழக்குப் - பார்க்குளுயர்

தெற்குப் பினாகி திகழிருப தன் காதம்

நற்றொண்டை நாடெனவே நாட்டு”


இலக்கிய இடம்/சிறப்புகள்

உசாத்துணை

தொண்டை மண்டல சதகம்,மதுரைத் திட்டம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.