துயிலெடை நிலை
From Tamil Wiki
Revision as of 11:06, 13 February 2022 by Subhasrees (talk | contribs) (துயிலெடை நிலை - முதல் வரைவு)
துயிலெடை நிலை (பள்ளியெழுச்சி )தொகைநிலைச் செய்யுள் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். மன்னனை உறக்கத்திலிருந்து எழும்படி வேண்டுவதாகப் பாடப்படுவது துயிலெடை நிலை[1].
பக்திக் காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகப் பாடும் வழக்கம் ஏற்பட்டதுடன், தனியான ஒரு சிற்றிலக்கியமாக உருவானது.
குறிப்புகள்
- ↑ கண்படை மன்னர் முன்னர்த் தண்பதம் விடியல் எல்லை இயல்புறச் சொல்லி தந்த திறையரும் தாராத் திறையரும் ஏத்தி நின்மொழி கேட்டுஇனிது இங்க வேண்டினர் இத்துயில் எழுகென விளம்பின் அதுவே மன்னர் துயில்எடை நிலையே. - பன்னிரு பாட்டியல், பாடல் 324
உசாத்துணைகள்
- சுப்பிரமணியன், ச. வே. (பதிப்பாசிரியர்), தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை. 2009.