being created

குமாரசெல்வா

From Tamil Wiki
Revision as of 23:19, 18 June 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Image Added:)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
எழுத்தாளர், பேராசிரியர் குமாரசெல்வா (படம் நன்றி: இந்து தமிழ் திசை)

குமாரசெல்வா (செல்வகுமார்) (பிறப்பு: மார்ச் 30, 1964) எழுத்தாளர், கவிஞர், இதழாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். குமரி விளவங்கோடு வட்டார வழக்கில் பல படைப்புகளைத் தந்தார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

செல்வகுமார் என்னும் இயற்பெயரை உடைய குமார செல்வா, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோட்டில், மார்ச் 30, 1964 அன்று, செல்லையன் - செல்லத்தாய் இணையருக்குப் பிறந்தார். ஏழு வயதில் தந்தையை இழந்தார். வறுமையான சூழலில் வளர்ந்தார். ஆரம்பக்கல்வியை மார்த்தாண்டம் எல்.எம்.ஜே.பி.எஸ் பள்ளியில் படித்தார். நடுநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியை மார்த்தாண்டம் எல்.எம்.எஸ் பள்ளியில் பயின்றார். மேல்நிலைப் படிப்பை மார்த்தாண்டம் அரசு ஆடவர் மேல்நிலைப்பள்ளியில் கற்றார்.

மாரத்தாண்டம் கிறிஸ்தவக் கல்லூரியில இளங்கலை வரலாறு பயின்றார். தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.  கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து இளம் முனைவர் (M.Phil) பட்டம் பெற்றார். கேரளப் பல்கலைக்கழகத்தில் ‘தேசிய இன விடுதலைப் போரில் தற்கால ஈழத்தமிழ்க் கவிதைகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

குமாரசெல்வா மணமானவர். மனைவி டாக்டர் சரோஜாபாய், ஹோமியோபதி மருத்துவர். மகன்கள்: சீகன்பால்க், தியான்செல்வ்.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.