சிறுத்தொண்ட நாயனார்
சிறுத்தொண்ட நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சிறுத்தொண்ட நாயனாரின் இயற்பெயர் பரஞ்சோதி. இவர் சோழ நாட்டில் உள்ள திருச்செங்காட்டங்குடியில், பரம்பரை பரம்பரையாக மன்னர்களுக்கு மந்திரியாகவும் சேனாதிபதியாகவும் விளங்கிய குலத்தில் தோன்றினார். போர்த் தொழிலில் தேர்ச்சி பெற்று சிறந்த வீரராக இருந்தார். சிறந்த சிவபக்தராகத் திகழ்ந்தார். சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வதை விரும்பினார்.
சிவத்தொண்டு
ஒருமுறை போருக்காக வாதாபிக்குச் சென்ற பரஞ்சோதியார், பகை மன்னனைப் போரில் வென்று, அங்கிருந்த பொக்கிஷங்களையும், யானை, குதிரை முதலியவற்றையும் கொணர்ந்து மன்னனிடம் சேர்ப்பித்தார். அதுகண்டு மன்னன் மிகவும் மனமகிழ்ந்து அவரைப் பாராட்டினான். அவர் சிவபக்தர் என்பதையும், சிவத்தொண்டை எப்போதும் விரும்புகிறவர் என்பதையும் பிறர் மூலம் அப்போதுதான் அறிந்தான். உடனடியாக பரஞ்சோதியாரை சேனைத் தலைவர் பதவியில் இருந்து விடுவித்தான். பொன்னும் பொருளும் கொடுத்து அவர் விரும்பியவாறு சிவத்தொண்டினைச் செய்து வாழப் பணித்தான்.
பரஞ்சோதியாரும் அதனை மகிழ்ந்தேற்று, தன் இல்லம் சென்றார். தன்னிடம் உள்ள செல்வத்தைக் கொண்டு சிவத் தொண்டுகளைச் செய்து வந்தார். பரஞ்சோதியார், சிவனடியார்களுக்கு மிகவும் பணிந்து நின்று தம்மை மிகவும் சிறியவராய்க் காட்டிக் கொள்ளும் தன்மை கொண்டவராக இருந்ததால் ‘சிறுத்தொண்டர்’ என்று அழைக்கப்பட்டார்.
தொன்மம்/சிவனின் ஆடல்
சிறுத்தொண்டர், மகன் சீராளனுடனும் மனைவியுடனும் இணைந்து சிவத்தொண்டுகள் செய்து வந்தார். அவரது பெருமையை உலகுக்குக் காட்ட சிவன் ஆடல் ஒன்றை நிகழ்த்தினார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.