பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார்
பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் சங்ககாலப் பெண்பாற் புலவர். இவர் பாடிய ஆறு பாடல்கள் புறநானூறு, அகநானூறு, நற்றிணையில் உள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
நக்கண்ணையார் பெருங்கோழிநாய்கனுக்கு உறையூரில் மகளாகப் பிறந்தார். சோழ நாட்டுத் தலைநகர்களுள் ஒன்றான உறையூருக்கு கோழி என்ற பெயரும் உண்டு. நாய்கன் என்பது கடல் வாணிகம் செய்யும் இனத்தார் வைத்துக் கொள்ளும் பெயர்.
இலக்கிய வாழ்க்கை
நக்கண்ணையார் புறநானூற்றில் 83, 84, 85 எண் கொண்ட பாடல்களும், அகநானூற்றில் ஒன்றும், நற்றிணையில் இரண்டும் மொத்தம் ஆறு பாடல்கள் பாடினார்.
பாடல்வழி அறியவரும் செய்திகள்
உறையூர் வீரை வேண்மான் வெளியன் தித்தன் என்னும் சோழ மன்னனின் மகன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி. அவன் தந்தையோடு பகைத்துக் கொண்டு நாடிழந்து, வறுமையில் புல்லரிசிக் கூழுண்டு வருந்தியிருந்தான். அந்நிலையிலும் ஆமூர் மல்லன் என்பானைப் போரில் வெற்றி கொள்கின்றான். அவன் வீரத்தைக் கண்ட நக்கண்ணையார் அவ்வரசனைத் தாம் மணந்து கொள்ள விரும்பியதாக அவர் பாடிய புறநானூற்றின் பாடலில் உள்ளது.
பாடல் நடை
- புறநானூறு
- அகநானூறு
- நற்றிணை
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.