வாயுறைவாழ்த்து
From Tamil Wiki
வாயுறைவாழ்த்து தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.
வேப்பங்காயும் கடுக்காயும் கசப்பும் துவர்ப்பும் கொண்டதாக இருந்தாலும் பின்னர் அவை மருத்துவ நன்மையை அளிப்பது போல மெய்ப்பொருளாகிய அறம் கசப்பான சொற்களாக இருந்தாலும் பின்னர் பெரிதும் பயன் தரும் என மருட்பாவால் கூறுவது வாயுறை வாழ்த்து[1].
குறிப்புகள்
- ↑ கடுவும் வேம்பும் கடுப்பன ஆகிய வெஞ்சொல் தாங்க மேவாது ஆயினும் பின்னர்ப் பெரிதும் பயன்தரும் என்ன மெய்ப்பொருள் அறம் அருட் பாவால் விளம்புதல் வாயுறை வாழ்த்தென வைக்கப் படுமே. - முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 159
உசாத்துணைகள்
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இவற்றையும் பார்க்கவும்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.