முத்துராசர்
முத்துராசர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
முத்துராசர் சோழநாட்டின், உறையூர்ச் செந்தியப்பரின் மகன். யாழ்ப்பாணத்தில் தங்கி வாழ்ந்தார்.
இலக்கிய வாழ்க்கை
முத்துராசர் யாழ்ப்பாணக் குடியேற்ற வரலாற்றினைக் கூறுகின்ற 'கைலாய மாலை' நூலை எழுதினார். இந்நூல் கலிவெண்பாக்களால் இயற்றப்பட்டது. 1906-ல் தீ. கைலாச பிள்ளையால் பதிப்புக் குறிப்புகள் ஏதுமின்றி அச்சேற்றப்பட்டது. 1939-ல் முதலியார் செ. இராசநாயகம் எழுதிய ஆராய்ச்சி முன்னுரையுடன், ஆ. முத்துப்பிள்ளையின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் செ.வே. ஜம்புலிங்கம் பிள்ளையால் மீண்டும் வெளியிடப்பட்டது. காப்பு நீங்கலாக 310 கண்ணிகளைக் கொண்டது. மெய்க்கீர்த்தி மாலை, உலா என்ற நூல்வகைகளின் பாடு பொருளும் யாப்பும் இணைந்த கலவையாக நூல் உள்ளது.
நூல் பட்டியல்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.