under review

சண்முகச்சட்டம்பியார்

From Tamil Wiki
Revision as of 13:19, 31 October 2022 by Ramya (talk | contribs) (Created page with "சண்முகச்சட்டம்பியார் (பொ.யு. 1794) ஈழத்து தமிழ்ப்புலவர், ஆசிரியர். கிறுஸ்துவ மதம் சார்ந்த செய்யுள்களை எழுதினார். == வாழ்க்கைக் குறிப்பு == சண்முகச்சட்டம்பியார் யாழ்ப்பாணம், அராலியி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சண்முகச்சட்டம்பியார் (பொ.யு. 1794) ஈழத்து தமிழ்ப்புலவர், ஆசிரியர். கிறுஸ்துவ மதம் சார்ந்த செய்யுள்களை எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சண்முகச்சட்டம்பியார் யாழ்ப்பாணம், அராலியில் சுவாமிநாதருக்கு மகனாகப் பிறந்தார். இளமையில் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் இருபாலைச் சேனாதிராய முதலியாரிடத்தில் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். சைவராயிருந்து பின்னதாகக் கிறித்து சமயத்தைத் தழுவினார். இவர் ஆசிரியராகவிருந்து மிஷனரிமார் பலருக்குக் கல்வி கற்பித்தார்.

இலக்கிய வாழ்க்கை

சண்முகச்சட்டம்பியார் கிறிஸ்துவின் தாயாரை வாழ்த்திச் செய்யுள் பாடியுள்ளார்.

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
  • ஆளுமை:சண்முகச்சட்டம்பியார், சுவாமிநாதர்: நூலகம்


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.