under review

சோ. விஜய குமார்

From Tamil Wiki
Revision as of 14:36, 1 May 2025 by Ramya (talk | contribs)
சோ. விஜய குமார்

சோ. விஜய குமார் (பிறப்பு: அக்டோபர் 20, 1996) தமிழில் எழுதிவரும் கவிஞர். உணர்வுத்தீவிரமான கவிதைகளை எழுதுபவர். 2020 முதல் உயிர்மை இதழின் இணையாசிரியராக உள்ளார். உயிர்மை இதழில் இவர் எடுத்த நேர்காணல்கள் பரவலாக கவனம்பெற்றன.

வாழ்க்கைக் குறிப்பு

சோ. விஜய குமார் தமிழ்நாட்டின் கள்ளகுறிச்சி மாவட்டத்தில் சோமசுந்தரம், செல்வநாயகம் இணையருக்கு அக்டோபர் 20, 1996-ல் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு தங்கை. கள்ளக்குறிச்சி வித்யாலட்சுமி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். சேலம் கணேஷ் கலை அறிவியல் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். சென்னை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ஊடகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இதழியல்

  • சோ. விஜய குமார் 2020 முதல் உயிர்மை இதழின் இணையாசிரியராக உள்ளார்.
  • உயிர்மை பதிப்பகத்தின் தொகுப்பாசிரியர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

சோ. விஜய குமார் 2020 முதல் முகநூலில் கவிதைகள் எழுதி வந்தார். முதல் கவிதை வாசகசாலை இணைய இதழில் வெளியானது. முதல் கவிதைத் தொகுப்பு 'ஒரு ஸ்க்ரோல் தூரம்' 2023-ல் உயிர்மை பதிப்பகம் வெளியீடாக வந்தது. உயிர்மை, நீலம், மணல்வீடு ஆகிய இதழ்களில் இவருடைய கவிதைகள் வெளிவந்துள்ளன. மனுஷ்ய புத்திரன், வெய்யில், பெருந்தேவி, போகன் சங்கர், அசோகமித்திரன், ஆலன் கின்ஸ்பெர்க் ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.

விருது

  • விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது - 2025

மதிப்பீடு

"மொழியும் உணர்வும் கூர்ந்து வரும் புதிய கவிகள் இன்று அபூர்வம். விஜயகுமாரின் கவிதைகளில் இரண்டுமே இயைந்து வந்திருக்கிறது. ஹராகிரி செய்யும் சாமுராய் தன் வாளை எவ்வளவு கூர்மையாகத் தீட்டுவானோ அதே கவனத்துடனும் உணர்வுத்தீவிரத்துடனும் எழுதப்பட்ட கவிதைகள்” என போகன் சங்கர் 'சிற்றெறும்பின் நிழல்' தொகுப்பின் பின்னட்டைக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நூல்பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • ஒரு ஸ்க்ரோல் தூரரம் - (2023)
  • சிற்றெறும்பின் நிழல் (2024)
  • அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ(2025)
தொகுப்பாசிரியர்
  • உயிர்மை நேர்காணல் தொகுதி - 1

இணைப்புகள்



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jan-2025, 08:21:24 IST