முதலாழ்வார்கள்
பன்னிரு ஆழ்வார்களில் பொய்கையாழ்வார், பூததாழ்வார், பேயாழ்வார் மூவரும் முதலாழ்வார்கள் என அழைக்கப்படுகிறார்கள். திருக்கோவலூரில் ஓர் வீட்டின் இடைகழியில் இவர்களின் சந்திப்பில் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிறந்தது.
மூவரின் பிறப்பு
முதலாழ்வார் மூவரும் அடுத்தடுத்த தினங்களில் பிறந்ததாகக் கூறப்படுகிறது. மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தின மாலை இதைக் குறிப்பிடுகிறது
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம்” இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்
பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே தோன்று சிறப்பால்!
பொய்கையாழ்வார் ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர். பூதத்தாழ்வார் ஐப்பசி அவிட்ட நட்சத்திரத்திலும் பேயாழ்வார் சதய நட்சத்திரத்திலும் பிறந்தவர்கள். மூவருமே தம் பெற்றோரால் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள். 'அயோநிஜர்கள்' (கருவறையிலிருந்து பிறக்காதவர்கள்) என அழைக்கப்பட்டவர்கள்.
திருக்கோயிலூரில் சந்திப்பு
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
[Category:Tamil Content]]