சு. ஆறுமுகம்
From Tamil Wiki
Revision as of 21:51, 14 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added display-text to hyperlinks)
சு. ஆறுமுகம் (பொயு 19 ஆம் நூற்றாண்டு) தமிழறிஞர், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர். இவர் எழுதிய திரிகோணமலை அந்தாதி முக்கியமான சிற்றிலக்கிய நூலாகும்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள திரிகோணமலையில் சிதம்பரநாதர் சுப்பிரமணீயனாருக்கு மகனாக பொயு 19 ஆம் நூற்றாண்டில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
சு. ஆறுமுகம் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான அந்தாதியில் திருக்கோணேசரை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு திரிகோணமலை அந்தாதி பாடினார். 1886-ல் பாடி முடிக்கப்பட்டது. 1990-ல் கொழும்பு இந்து கலாசார அமைச்சினால் மீள் பதிப்பிக்கப்பட்டது.
நூல்கள் பட்டியல்
அந்தாதி
- திரிகோணமலை அந்தாதி 1886
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா|யாழ்ப்பாணச் சரித்திரம் - நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1912)|சிற்றிலக்கியப் புலவர் அகராதி - ந.வீ.செயராமன் (1983)|இந்துக் கலைக்களஞ்சியம் - கலாகீர்த்தி பொ பூலோகசிங்கம் (1990)
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.