குழந்தைக் கவிராயர்
From Tamil Wiki
குழந்தைக் கவிராயர் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்.
பிறப்பு
சிவகங்கைக்கு அருகிலுள்ள மிதிலைப்பட்டியில் பிறந்தார்.தந்தை மங்கைபாகக் கவிராயர்.
இலக்கிய வாழ்க்கை
முல்லையூர் தாண்டவராய பிள்ளையை பாட்டுடை தலைவனாகக் கொண்டு, 301 கண்ணிகளைக் கொண்ட மான் விடு தூது எனும் நூலையும், சிவகங்கை இராமகிருஷ்ணப்பிள்ளை, புதுகோட்டை திருமலைத்தொண்டைமான் ஆகியோர் குறித்து பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.
இவரின் தனிப்பாடல்கள் மான் விடு தூது நூலில் நூலாசிரியர் குறிப்பில் இடம் பெற்றுள்ளன.
படைப்புகள்
- மான் விடு தூது
உசாத்துணை
- தமிழ்ப் புலவர் வரிசை : எட்டாம் புத்தகம், சு அ ராமசாமிப் புலவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (சென்னை ), 1955
- குழந்தைக் கவிராயர் இயற்றிய மான் விடு தூது -உ.வே.சாமிநாதையர் பதிப்பு, கலைமகள் வெளியீடு, 1936, பிராஜெக்ட் மதுரை
- குழந்தைக் கவிராயர் இயற்றிய மான் விடு தூது -உ.வே.சாமிநாதையர் பதிப்பு, தியாகராச விலாச வெளியீடு, 1956 , தமிழ் டிஜிட்டல் நூலகம்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.