மாப்பாண முதலியார்
மாப்பாண முதலியார் (19ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், நாடக ஆசிரியர். சோமகேசரி நாடகம், பரிமளகாச நாடகம் ஆகியவை முக்கியமான படைப்புகளாகும்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை யாழ்ப்பாண தென்மராட்சியில் எழுதுமட்டுவாள் எனும் ஊரில் 19ம் நூற்றாண்டில் மாப்பாண முதலியார் பிறந்தார். வைரவ சந்தான குரு மரபில் தோன்றினார். இருமரபுந்துய்ய குலசேகரப் புது நல்ல மாப்பாண முதலியார் என்பது சிறப்புப் பெயர். தென்மராட்சிப் பகுதிக்கு மணியக்காரராக சில காலம் பணி புரிந்தார்.
இலக்கிய வாழ்க்கை
ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.சோமகேசரி நாடகம், பரிமளகாச நாடகம் ஆகிய நாடகங்களை எழுதினார். தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தார். திருச்செந்தூர் புராண விரிவுரை எனும் நூலை எழுதினார்.
நூல்கள் பட்டியல்
- ஆசெளச விதி
- சோமகேசரி நாடகம்
- பரிமளகாச நாடகம்
- குறவஞ்சி
- விரத நிச்சயம்
- திருச்செந்தூர் புராண விரிவுரை
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.