under review

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

From Tamil Wiki
Revision as of 17:12, 16 March 2022 by Madhusaml (talk | contribs)

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான மும்மணிக்கோவை வகையில் அமைந்த நூல். சைவ நூல். இந்நூல் நம்பியாண்டார் நம்பியின் திருமுறைத் தொகுப்பில் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

நூல் பற்றி

இந்த நூலில் 30 பாடல்கள் உள்ளன. சைவர்களால் பெரிதும் பயிலப்படும் நூல். ‘உமையொரு பாகன்' வடிவம் பாதம் முதல் தலைமுடி வரை வர்ணிக்கப்படுகிறது. திருவடி, திருவின் ஆகம் (மார்பு), திருக்கரம், திருநெடுநாட்டம் (கண்கள்), திருமுடி என்று ஆறு பகுதிகளாக அர்த்த நாரீசுவரர் வடிவத்தைப் பட்டினத்தடிகள் இந்நூலில் வர்ணிக்கிறார். பட்டினத்தடிகள் திருவுருவ வர்ணனையாகக் கூறும் விளக்கங்களில் பல சிற்ப சாத்திரங்களிலும் காணப்படுகிறது. மொழி ஆய்வு செய்பவருக்கு இந்த நூலில் இடம்பெறும் சொற்கள் சிறந்த ஆய்வுத் தளமாகத் திகழும். சைவ சமய நூல்.

பாடல் நடை

தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து
வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து
சிலம்பும் கழலும் அலம்பப் புனைந்து
கூற்றின் ஆற்றல் மாற்றிப் போற்றாது
வலம்புரி நெடுமால் ஏனமாகி நிலம்புக்கு

பாடல் எண் 30

கரத்தினில் மாலவன் கண்கொண்டு
    நின்கழல் போற்றநல்ல
வரத்தினை ஈயும் மருதவப்
    பாமதி ஒன்றுமில்லேன்
சிரத்தினு மாயென்றன் சிந்தையு
    ளாகிவெண் காடனென்னும்
தரத்தினு மாயது நின்னடி
    யாந்தெய்வத் தாமரையே

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.