கல்லாடம் (பாட்டியல் நூல்)
கல்லாடம் (பொயு 9 ஆம் நூற்றாண்டு) ஒரு பாட்டியல் இலக்கண நூல். பாட்டியல் என்பது சிற்றிலக்கியங்கள் என்னும் நூல் வகையின் இலக்க்கணம் பற்றி பேசும் நூல். இதனைச் செய்தவர் கல்லாடர் எனும் புலவர். பார்க்க : கல்லாடர் (பொயு 9 ஆம் நூற்றாண்டு) . இது பன்னிரு பாட்டியல் என்னும் நூலில் குறிப்பிடப்படும் பாட்டியல் நூல்களில் ஒன்று.
கல்லாடம் என்னும் இன்னொரு நூல் உள்ளது. இது முருகனைப் பற்றிப் பாடப்பட்டது. பார்க்க கல்லாடம் .பொயு 12-13 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.
பன்னிரு பாட்டியல்
பன்னிரு பாட்டியல் என்னும் இலக்கண நூல், 15 பாட்டியல் புலவர்கள் செய்த பாட்டியல் நூல்களிலிருந்து பாடல்களைத் திரட்டி உருவாக்கப்பட்ட ஒரு தொகைநூல். இந்த 15 புலவர்களில் கல்லாடர் என்பவரும் ஒருவர். இவர் ஒன்பதாம் நூற்றாண்டுப் புலவர். இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை.
உசாத்துணை
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், 2005
- கல்லாடம்- தினமணி கட்டுரை
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.