செல்லையா பிள்ளை
From Tamil Wiki
Revision as of 09:11, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
செல்லையா பிள்ளை (19-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமப் பிரிவு மானிப்பாயில் 19-ம் நூற்றாண்டில் செல்லையா பிள்ளை பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர். நவரத்தினம், பதிகம் எனும் சிற்றிலக்கிய வகைமைகளில் முத்து மாரியம்மன் நவரத்தினம், ஈழமண்டலத் திருவேரக முருகர் பதிகம் நூல்களை இயற்றினார்.
நூல்கள் பட்டியல்
நவரத்தினம்
- முத்து மாரியம்மன் நவரத்தினம்
பதிகம்
- ஈழமண்டலத் திருவேரக முருகர் பதிகம்
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
✅Finalised Page