மனீஷா பஞ்சகம்
மனீஷா பஞ்சகம் ஆதிசங்கரர் 'உறுதியான, நிச்சயிக்கப்பட்ட ஞானத்தைப் பற்றி ஐந்து பாடல்களிலே பாடிய நூல். அனைத்தும் பிரம்மமே என்று அத்வைதம் கூறுவதனால் உயிர்களிடையே வேறுபாடில்லை, மானுடரிடையேயும் வேறுபாடில்லை என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
ஆசிரியர்
மனீஷா பஞ்சகத்தை இயற்றியவர் ஆதிசங்கரர்.
பெயர்க்காரணம்
சம்ஸ்கிருத மொழியில் ‘மனீஷா’ என்றால் நிச்சயிக்கப்பட்ட அறிவு என்பது பொருள். ஐயமின்றி, முற்றிலும் ஆய்ந்து, முழுதாய் உணர்ந்து வரையப்பட்ட தீர்மானமே மனீஷா எனப்படும். ஐந்து ஸ்லோகங்களில் உறுதியான அறிவைப் பற்றிக் கூறுவதால் இப்பெயர் பெற்றது.
தோற்றம்
மனீஷா பஞ்சகம் தோன்றியதைப்பற்றிய தொன்மக்கதை:
சங்கரர் ஆற்றில் நீராடி விட்டு வரும்போது ஐந்து நாய்களுடன் தாழ்த்தப்பட்ட குலத்தைத் சேர்ந்த சண்டாளர் ஒருவர் அவர் முன்னே வந்தார். சங்கரரின் சீடர்கள் சங்கரருக்கு வழிவிட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்டனர். அச்சண்டாளர் சங்கரரிடம் "என் உடல் நகர வேண்டுமா அல்லது ஆத்மா நகர வேண்டுமா?''எனக் கேட்க சங்கரர் அவர் அனைத்தும் உணர்ந்த ஞானி எனக்கண்டு அவர் காலில் விழுந்து வணங்கினார். அத்வைதத்தின் பரிபூர்ண உண்மையை உணர்த்தி அருளியதாக கூறி அச்சண்டாளரை தனது குருவாக ஏற்று சங்கரர் மனீஷா பஞ்சகம் பாடினார். இவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக சங்கர விஜயம் முதலிய நூல்கள் கூறுகின்றன.
நூல் அமைப்பு
மனீஷா பஞ்சகம் ஐந்து பாடல்களைக் கொண்டது. அனுஷ்டுப் சந்தத்தில் அமைந்த முதல் இரண்டு ஸ்லோகங்கள் சங்கரர் கங்கையில் நீராடச் செல்லும்போது எதிர்ப்பட்ட புலையனை விலகிச்ச்செல்லுமாறு சீடர்கள் கூறுவதைப் பற்றியவை. அடுத்த இரு செய்யுள்களும் தம்மை விலகிப்போ எனக் கூறிய துறவிகளையும், அவர்களது தலைவரான ஆதி சங்கரரையும் நோக்கிப் சண்டாளன் கேட்ட கேள்விகள்.
'மனீஷா மம' (எனது உறுதிப்படுத்தப்பட்ட அறிவு) என முடியும் எனும் ஐந்து ஸ்லோகங்களும் சங்கரர்
கேள்விகள்
अन्नमयाद् अन्नमयम् अथवा चैतन्यमेव चैतन्यात्
यतिवर दूरीकर्तुम् वांछसि किम् ब्रूहि गच्छ गच्छेति
துறவிகளில் சிறந்தவனே! எதனை விலகிப்போ, விலகிப்போ எனக்கூறி வேற்றுமையால் தள்ளி வைக்க விழைகிறாய்? உன்னிடமும் என்னிடமும் இருக்கிற அன்னமயகோசமான இந்த உடலையா? அல்லது ஒருவேளை உள்ளே இருக்கின்ற, அதே சமயம் எங்கும் விரிந்த ஆத்மாவையா?
அலைகளற்ற ஆனந்தக் கடலாக ஒவ்வொருவருள்ளும் ஆன்மா இருக்கிறது என்ற ஞானம் அல்லவோ சரியான அறிவாகவும் புரிந்து கொண்ட பயனாகவும், (சங்கரரைப் போல) ஞானவழியில் செல்பவருக்கு இருக்க வேண்டும்? (அவ்வாறு இல்லாமல்) வேறுபாடு இல்லாத பிரம்மத்தில் எப்படி ‘இவன் நாயைப் புசிக்கும் புலையன்’ , ‘இவன் அந்தணன்’ என்று வெறுப்பால் வெளி வேறுபாட்டைக் காண முடியும்?
किम् गंगाम्बुधि बिंबितेम्बर मणौ चंडाल वीधी पयः
पूरेवा अन्तरमस्ति कांचनघटी मृत्कुम्भयोर्वांबरे?
प्रत्यग्वस्तुनि निस्तरन्ग सहजानन्दावबोधाम्बुधौ विप्रो
अयम् श्वपचोयमित्यपि महान् को अयम् विभेद भ्रमः?
அலைகளற்ற ஆனந்தக் கடலாக ஒவ்வொருவருள்ளும் ஆன்மா இருக்கிறது என்ற ஞானம் அல்லவோ சரியான அறிவாகவும் புரிந்து கொண்ட பயனாகவும், (சங்கரரைப் போல) ஞானவழியில் செல்பவருக்கு இருக்க வேண்டும்? (அவ்வாறு இல்லாமல்) வேறுபாடு இல்லாத பிரம்மத்தில் எப்படி ‘இவன் நாயைப் புசிக்கும் புலையன்’ , ‘இவன் அந்தணன்’ என்று வெறுப்பால் வெளி வேறுபாட்டைக் காண முடியும்?
வானத்தின் (ஒளி) மணியான சூரியன் ஒன்றே, புனிதமான கங்கை நீரிலும், புலையன் வசிக்கும் தெருவில் தேங்கியுள்ள (சாக்கடை) நீரிலும் ஒன்றுபோலவே பிரதிபலிக்கின்றது! தங்கக் குடத்துக்குள்ளும், மண்ணாலான குடத்துக்குள்ளும், ஒரே வெற்றிடம்தானே (ஆகாயவெளி) குடியிருக்கின்றது? அதனால் என்ன வேறுபாடு இவற்றில்?
உடல் பலவாக இருப்பினும், உள்ளே ஒளி விளக்காக, மாறாமல் இருக்கின்ற ஆன்மா ஒன்றே என்பது இக்கேள்விகளால் உணர்த்தப்படுகிறது.
மனீஷா ( சங்கரர் பெற்ற உறுதியான அறிவு)
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.