சித்தி றபீக்கா
சித்தி றபீக்கா (பிறப்பு: ஏப்ரல் 1, 1980) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
சித்தி றபீக்கா இலங்கை சம்மாந்துறையில் முஹம்மது இஸ்மாயில், குழந்தையம்மா இணையருக்கு ஏப்ரல் 1, 1980-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கமு/சது/தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்திலும், உயர்நிலைக் கல்வியை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியிலும் கற்றார்.
அமைப்புப் பணிகள்
சித்தி றபீக்கா தேனகம், படர்க்கைகளின் இணையம் ஆகிய அமைப்புகளில் இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
இலக்கிய வாழ்க்கை
சித்தி றபீக்காவின் முதல் கவிதை இலங்கை வானொலியில் 1996-ல் வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடல்கள் எழுதினார். இருப்பு இதழ், மூன்றாவது மனிதன் ஆகியவற்றில் இவரின் படைப்புகள் வெளிவந்தன. 'வற்றாத ஈரம்' எனும் தலைப்பில் இவரது கவிதை தொகுப்பு வெளியானது.
நூல் பட்டியல்
கவிதைத்தொகுப்பு
- வற்றாத ஈரம்
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.