பத்மகுமாரி
பத்மகுமாரி (பிறப்பு: பிப்ரவரி 3, 1993) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். சிறுகதைகள் எழுதிவருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
பத்மகுமாரி நாகர்கோவில் தாழக்குடியில் நல்லபெருமாள்(கோலப்பன்), வேலம்மாள்(ரமணி) இணையருக்கு மகளாக பிப்ரவரி 3, 1993-இல் பிறந்தார். ராமன்புதூர் லிட்டில் பிளவர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். மெப்கோ ஸ்லங் பொறியியல் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். சென்னையில் கணிப்பொறி மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
பத்மகுமாரியின் முதல் கதை சொல்வனம் இணைய இதழில் ஜீலை 2021-l வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பு ’நட்சத்திரம்’ 2023-இல் வெளியானது. சொல்வனம், வாசகசாலை, பதாகை, கலகம், கனலி ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகியுள்ளன.
நூல் பட்டியல்
சிறுகதைத் தொகுப்பு
- நட்சத்திரம்
இணைப்புகள்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.