செருக்களவஞ்சி
செருக்களவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். செருக்களத்தில் (போர்க்களத்தில்) நிகழும் கொடூரங்களை ஆசிரியப் பாவினாலும், வஞ்சிப்பாவினாலும் கூறும்படி அமைந்தது செருக்களவஞ்சி. [1]. போரில் அறுபட்டு வீழ்ந்த மனிதர், குதிரைகள், யானைகள் போன்றவற்றின் உடலங்களிலிருந்து, தசையையும், இரத்தத்தையும், பேய், பிசாசுகளும், கழுகு, நாய், காகம் முதலானவையும் எமது எமது என்று தின்று ஆரவாரம் செய்யும். பூதங்கள் இசைபாடி ஆடிக் களிக்கும் என்று செருக்களவஞ்சியில் கூறப்படுவன பற்றிப் பிரபந்த தீபிகை என்னும் பாட்டியல் நூல் விளக்குகிறது.
அடிக்குறிப்புகள்
- ↑
ஆசுஅற உணர்ந்த அரசர் பாவால்
தூசிப் படையைச் சொல்வது தானை
மாலை ஆகும்; வரலாற்று வஞ்சி
ஞாலம்மேல் தானை நடப்பது சொல்லின்;
செருக்களம் கூறின் செருக்கள வஞ்சி;
விரித்து ஒரு பொருளை விளம்பின் அப்பெயராம்- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
✅Finalised Page