being created

நற்றிணை

From Tamil Wiki
Revision as of 02:43, 4 November 2023 by Jayashree (talk | contribs)

நற்றிணை தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கியத் தொகுப்பின் முதல் நூல். 175 புலவர்களால் பாடப்பட்ட 400 பாடல்கள் கொண்ட அகத்திணை நூல்.

பதிப்பு, வெளியீடு

நற்றிணையை முதன்முதலில் உரையெழுதிப் பதிப்பித்தவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.

தொகுப்பு

நற்றிணை தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டது.நற்றிணையைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. தொகுத்தாரது பெயர் தெரியவில்லை. நற்றிணைப் பாடல்களில் 234-ஆம் பாடல் முற்றும் கிடைக்கவில்லை. 385-ஆம் பாடலின் பிற்பகுதியும் மறைந்து போயிற்று.56 பாடல்களை எழுதியவர் பெயர் காணப்பெறவில்லை. ஏனைய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 192.

நூல் அமைப்பு

நற்றிணை கடவுள் வழ்த்துடன் சேர்த்து 7 முதல் 13 அடிகள் கொண்ட 401 ஆசிரியப்பாக்களால் ஆனது. குறுந்தொகை, நெடுந்தொகை, இரண்டிற்கும் இடைப் பட்டு, அளவான அடிகளை உடைமையினால், இது 'நற்றிணை' என வழங்கப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். நானூறு பாடல்களில் 234-ஆம் பாடல் முழுமையாகவும், 385-ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கவில்லை.

  • 7 அடிகளில் அமைந்த பாடல்கள் - 1
  • 8 அடிகளில் அமைந்த பாடல்கள் - 1
  • 9 அடிகளில் அமைந்த பாடல்கள் - 106
  • 10 அடிகளில் அமைந்த பாடல்கள் - 96
  • 11 அடிகளில் அமைந்த பாடல்கள் - 110
  • 12 அடிகளில் அமைந்த பாடல்கள் - 77
  • 13 அடிகளில் அமைந்த பாடல்கள் - 8
பாடியோர்

நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர்.  பார்க்க : நற்றிணைப் புலவர்கள். 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் கிடைக்கவில்லை.

பாடலில் இடம்பெற்ற தொடரால் பெயர் அமைந்த புலவர்கள்

  • வண்ணப்புறக் கந்தத்தனார்
  • மலையனார்
  • தனிமகனார்,
  • விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
  • தும்பிசேர்க்கீரனார்
  • தேய்புரிப் பழங்கயிற்றினார்
  • மடல் பாடிய மாதங்கீரனார்

மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. இந்நூலில் உள்ள நானூறு பாடல்களில் 234-ஆம் பாடல் முழுமையாகவும், 385-ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கப்பெறவில்லை.


உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.