ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை பதினோராம் திருமுறையில் இடம் பெரும் நூல். திருஞான சம்பந்தரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட உலா என்னும் சிற்றிலக்கியம். உலாமாலை உலாவுக்கு மற்றொரு பெயர்.
ஆசிரியர்
ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை நம்பியாண்டார் நம்பியால் இயற்றப்பட்டது. நம்பியாண்டார் நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்தவர். அவர் பாடிய 10 திருமுறைகள் பதினொன்றாம் திருமுறையில் இடம்பெறுகின்றன. அவற்றுள் ஆறு பிரபந்தங்கள் திருஞான சம்பந்தரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டவை.
நூல் அமைப்பு
ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை 143 கலிவெண்பாக்களால் ஆனது. சம்பந்தர் வீதியில் உலாவந்த பாங்கு 116 கண்ணிகளில் சொல்லப்படுகின்றன. பிள்ளையார் உலா வருதலைப் பேதை முதல் பேரிளம்பெண் ஈறாக ஏழு பருவப் பெண்களும் பார்த்தனர் எனத் மொகுப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. மற்ற உலா நூல்களின் 7 பருவப்பெண்களும் தனித்தனியே வருணனை செய்யப்பட்டிருப்பர். இந்த உலாநூல் அவ்வாறு செய்யாமல் தொகுப்பாகச் சொல்லி அவர்களின் நிலை விளக்கப்பட்டுள்ளது.
பாடல் நடை
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.