under review

ஞானதீபம் சாஸ்திரியம்மாள்

From Tamil Wiki
Revision as of 14:43, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

ஞானதீபம் சாஸ்திரியம்மாள் ( 1811-1860 ) (ஞானசாஸ்திரியம்மாள், ஞானதீபம்மாள்) தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியின் வளர்ப்பு மகள். கிறிஸ்தவ போதகராக பணியாற்றினார். இருமொழியாளர். மத நூல்களை ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்திருக்கிறார்

இளமை, கல்வி

ஞானதீபம் சாஸ்திரியம்மாள் 1811-ல் வேதநாயகம் சாஸ்திரியாரின் தங்கையான சூசையம்மாளுக்கு பிறந்தார். வேதநாயகம் சாஸ்திரியார் அவருக்கு முப்பதுநாள் வயதிருக்கையில் தத்து எடுத்துக்கொண்டார். ஞானதீபம் சாஸ்திரியம்மாள் வேதநாயகம் சாஸ்திரியிடமிருந்து தமிழ், ஆங்கிலம் கற்றார். அவருடைய மாணவியாகவும், அணுக்கத்தொண்டராகவும் வளர்ந்தார்.

மதப்பணி

ஞானதீபம்மாள் ஆங்கிலம் தமிழ் ஆகிய மொழிகளில் பயிற்சியும் வேதாகமத்தேர்ச்சியும் கொண்டிருந்தார்.18543-ல் 'இளமைபக்தி' என்னும் நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்தார். வேதநாயகம் சாஸ்திரி அவருடைய 'உபத்திராபத்திரம்' என்னும் நூலில் ஞானதீபம்மாளின் 12 திறமைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். 1853-ல் பிஷப் டி.அல்ட்ரி தஞ்சாவூர் வந்தபோது வேதநாயகம் சாஸ்திரியார் அவருக்கு ஜி.யூ. போப் இழைத்த அநீதிகளைப் பற்றிய புகாரை அனுப்பினார். அந்த விசாரணையில் மொழிபெயர்ப்பாளராக ஞானதீபம்மாள் செயல்பட்டார். இடையான்குடியில் ஏழாம் எட்வர்ட் அரசரின் மைத்துனராகிய கர்னல் முன் ஆங்கிலத்தில் வேதச்சொற்பொழிவு செய்து பாராட்டு பெற்றார். ஞானதீபம்மாள் கொழும்பில் பைபிள் சொற்பொழிவுகள் செய்துவந்தபோது கத்தோலிக்கரான சம்மனசு சாமியார் என்பவர் ஆண்கள் பெண்களின் சொற்பொழிவைக் கேட்கலாகாது என்று துண்டுபிரசுரம் வெளியிட்டார். மாதாவாகிய பெண்ணை வணங்கலாமா என ஞானதீபம்மாள் பதில் சொன்னார். கொழும்பில் ஞானதீபம்மாள் மறைந்தபோது சம்மனசு சாமியார் அவருக்கு அஞ்சலிப்பிரார்த்தனை நடத்தினார். கொழும்பில் கிடைத்த பணத்தில் 1870-ல் வேதநாயகம் சாஸ்திரியாரின் பாடல்களை பாடுவதற்கான சதுர் மண்டபத்தை தஞ்சாவூரில் கட்டினார்.

மறைவு

ஞானதீபம்மாள் கொழும்பில் 1960-ல் மறைந்தார்

உசாத்துணை


✅Finalised Page