திணை (இதழ்)
From Tamil Wiki
திணை (இதழ்) கலை இலக்கியப் பெருமன்ற இதழாக குமரி மாவட்டத்திலிருந்து வெளிவந்த இதழ்
வெளியீடு
திணை இதழ் கன்னியகுமரி மாவட்டம் தக்கலையிலிருந்து வெளிவரும் காலாண்டிதழ். நட.சிவகுமார் பொறுப்பாசிரியர். இதன் நிர்வாக ஆசிரியர் சி. சொக்கலிங்கம், ஆசிரியர் வி.சிவராமன். தொடங்கப்பட்டு ஐந்து இதழ்களுக்குப் பின் இடை நின்று மீண்டும் ஆறாவது இதழ் டிசம்பர் 2014 - மார்ச் 2015 வெளியானது.
உள்ளடக்கம்
இடதுசாரி இலக்கிய அமைப்பான கலை இலக்கியப் பெருமன்ற இதழாக வெளிவரும் இதழ். அரசியல், இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, கவிதைகள், விமர்சனங்கள் முதன்மையாக வெளிவரும் இதழ்.
பங்களிப்பாளர்கள்
- பொன்னீலன்
- கால சுப்ரமணியம்
- டி. தர்மராஜ்
- மதுமிதா
- ஆர். அபிலாஷ்
- ரோஸ் ஆன்றா
- எச். முஜிப் ரஹ்மான்
- மீரான் மைதீன்
- ந. முத்துமோகன்
- மேலாண்மை பொன்னுசாமி
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.