ஜெயந்தன்
ஜெயந்தன் (பெ. கிருஷ்ணன்;ஜூன் 15,1937-பிப்ரவரி 7,2010) சிறுகதை எழுத்தாளர், நாடக ஆசிரியர்.
பிறப்பு, கல்வி
ஜெயந்தனின் இயற்பெயர் பெ. கிருஷ்ணன். கிருஷ்ணன் மணப்பாறையில் பெருமாள்-ராஜம்மாள் இணையருக்கு ஜூன் 15,1937 அன்று பிறந்தார். மூன்றாவது வயதில் தந்தையை இழந்தார். தாய் ராஜம்மாள் சிற்றுண்டிக் கடை நடத்தி, அந்த வருமானத்தில் பிள்ளைகளை வளர்த்தார். மணப்பாறை நகராட்சிப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். இடைநிலைப் (Intermediate) படிப்பை முடித்தபின் ஆசிரியராகப் பணி புரிந்தார். காலநடை ஆய்வாளர் பயிற்சி பெற்றார்.
தனிவாழ்க்கை
ஜெயந்தன் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின் வருவாய்த் துறையில் பணியாற்றினார். கால்நடை ஆய்வாளர் பயிற்சிக்குப்பின் கால்நடை மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.
ஜெயந்தன் நாகலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டார். மகன்கள் சீராளன், அன்பு. மகள் வளர்மதி.
இலக்கிய வாழ்க்கை
நாடகங்கள்
கணையாழி இதழில் இவர் எழுதிய நாடகங்கள் மிகவும் முக்கியமானவை. ‘நினைக்கப்படும்’ என்ற தலைப்பில் இவர் எழுதிய நாடக வரிசை, இலக்கியச் சிந்தனை பரிசினை வென்றது. அதே போல, ‘சிறகை விரி, வானம் உனது’ என்னும் நாடகம், அகில இந்திய வானொலியின் பரிசினைப் பெற்ற படைப்பாகும். பிற்பாடு, இவரது நாடகங்கள் யாவும் தொகுக்கப்பட்டு, ‘ஜெயந்தன் நாடகங்கள்’ என்ற தலைப்பில் ஒரே புத்தகமாக வந்துள்ளது.
இலக்கிய இடம்
மறைவு
நினைவு
மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’, எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்வு செய்து 2011 முதல் விருதுகள் வழங்கி வருகிறது.
விருதுகள், பரிசுகள்
படைப்புகள்
உசாத்துணை
இணைப்புகள்
அடிக்குறிப்புகள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.