திருவெழுகூற்றிருக்கை (திருமங்கையாழ்வார்)
திருவெழுக்கூற்றிருக்கை சித்திரக்கவியில் ஒருவகை. ரத பந்தம் எனும் அமைப்பின் கீழ் வருவது. வீரசோழியம், மாறனலங்காரம் முதலான நூல்களில் இதன் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
இலக்கணம்
திரு எழுக்கூற்றிருக்கை சித்திரகவி வகைகளுள் இரத பந்தம் அமைப்பில் வருவது. இது. இரத பந்தம் தேரின் உருவத்தோன்றக் கட்டங்கள் போட்டு அவற்றில் எண் முறையே பாசுரப் பகுதிகளை அடக்க வேண்டும். தேருக்கு மேற்பகுதி என்றும், கீழ்ப் பகுதி என்னும் இரண்டு பகுதிகளாக இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஒவ்வொரு படியிலும் ஏழு கூறுகள் உண்டாகும்படிக் கீறவேண்டும். அப்படிக் கீறும்போது முதற்கூறு மூன்று அறையும், இரண்டாம் கூறு ஐந்து அறையும், மூன்றாம் கூறு ஏழு அறையும், நான்காம் கூது ஒன்பது அறையும், ஐந்தாம் கூறு பதினோரறையும், ஆறாம் கூறு பதிமூன்றரையும், ஏழாம் கூறு அங்ங்ணமே யாக, இப்படி ஒன்றற்கொன்று இரண்டறை மேற்பட்ட முறையே கீறவேண்டும். மேற்பகுதியில் தலையிலிருந்தும், கீழ்ப்பாகத்தில் அடியிலிருந்தும் இந்த முறை கொள்ளத் தக்கது வீரசோழியம் முதலிய இலக்கண நூல்களில் இதன் இலக்கணத்தைக் கண்டு தெளியலாம்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.