உழிஞைமாலை (பாட்டியல்)
From Tamil Wiki
உழிஞைமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவர் ஊருக்கு வெளியே சூழ்ந்திருக்க உழிஞைப்பூ மாலை சூடிப் படைகொண்டு சுற்றி வளைப்பதைக் கூறுவது உழிஞைமாலை[1].
அடிக்குறிப்புகள்
- ↑ மாற்றா ரூர்ப்புறம் வளைதர வுழிஞை வனைந்து காலாள் வளைப்பது கூறல் உழிஞை மாலையா முணருங் காலே - முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 115
உசாத்துணைகள்
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
- https://www.tamilvu.org/slet/l0I00/l0I00pka.jsp?pno=481