கம்பர் விருது
தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் கம்பர் விருதும் ஒன்று. இவ்விருது 2013 -ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
கம்பர் விருது
கம்பரைப் பற்றித் திறனாய்வு செய்வோர், கம்பர் படைப்புகளை ஆய்வு செய்வோர், கம்பனின் புகழ் பரப்பும் வகையில் கவிதை நூல்களை படைப்போர் என்ற வகையில் தமிழ்த் தொண்டாற்றுபவர்களுக்கு கம்பர் விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2013 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது, விருதுத் தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடையும் கொண்டது.
கம்பர் விருது பெற்றவர்கள் - 2021 வரை
எண் | ஆண்டு | பரிசு பெற்றோர் |
---|---|---|
1 | 2013 | முனைவர் பால இரமணி |
2 | 2014 | முனைவர் செ.வை. சண்முகம் |
3 | 2015 | கோ. செல்வம் |
4 | 2016 | இலங்கை ஜெயராஜ் |
5 | 2017 | சுகி. சிவம் |
6 | 2018 | முனைவர் க. முருகேசன் |
7 | 2019 | முனைவர் சரஸ்வதி ராமநாதன் |
8 | 2020 | டாக்டர் எச்.வி. ஹண்டே |
9 | 2021 | பாரதி பாஸ்கர் |
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.