வேடப் பிள்ளை
From Tamil Wiki
Revision as of 22:33, 21 December 2022 by Tamizhkalai (talk | contribs)
வேடப் பிள்ளை (1836-1906) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
வேடப் பிள்ளை இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த கோட்டை முனையில் 1836-ல் பிறந்தார். நாட்டு வைத்தியத்தினை முறையாகப் பயின்றார்.
இலக்கிய வாழ்க்கை
வேடப் பிள்ளை பதிகங்களும் ஊஞ்சல் போன்ற சிற்றிலக்கியங்களும் இயற்றினார்.
நூல் பட்டியல்
- ஆரப்பற்றை திருநீலகண்ட விநாயகர் பதிகம்
- கொத்துக்குளத்து மாரியம்மன் பதிகம்
- கோட்டை முனை வைரவன் காவியம்
- தாமரைக் கேணி மாரியம்மன் பதிகம்
- விஷ்ணு பதிகம்
- கண்டி ராசன் ஊஞ்சல்
- வள்ளியம்மன் ஊஞ்சல்
- மாரியம்மன் குளுத்தி
உசாத்துணை
{First review completed}}