கல்லாடர் (பொயு 9 ஆம் நூற்றாண்டு)
From Tamil Wiki
To read the article in English: Kallaadar (9th century CE).
கல்லாடர் (பொ.யு. 9-ஆம் நூற்றாண்டு) பன்னிரு பாட்டியல் என்னும் பாட்டியல் இலக்கண நூல்களில் ஒன்று கல்லாடனாரால் எழுதப்பட்டது. ஆய்வாளர்கள் இவரை பொ.யு. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என கருதுகிறார்கள் அனைத்துக் கல்லாடர்களும்: பார்க்க கல்லாடனார்
கல்லாடர் பாட்டியல்
கல்லாடர் என்பது ஒரு பாட்டியல் இலக்கண நூல். பாட்டியல் என்பது சிற்றிலக்கியங்கள் என்னும் வகை நூல்களின் இலக்கணத்தைப் பேசுவது. இதனைச் செய்தவர் கல்லாடர் எனும் புலவர். பன்னிரு பாட்டியல் என்னும் பாட்டியல் இலக்கண நூல் 15 பாட்டியல் புலவர்கள் செய்த பாட்டியல் நூல்களிலிருந்து சிலபல பாடல்களைத் திரட்டி உருவாக்கப்பட்ட ஒரு தொகைநூல். இந்த 15 புலவர்களில் கல்லாடர் என்பவரும் ஒருவர். இவர் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர்.
உசாத்துணை
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், 2005 - tamildigitallibrary.in
✅Finalised Page