அழகர் சித்தர்
- அழகர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அழகர் (பெயர் பட்டியல்)
- சித்தர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சித்தர் (பெயர் பட்டியல்)
அழகர் சித்தர் புதுச்சேரிக்கு அருகில் உள்ள தென்னம்பாக்கம் என்ற கிராமத்தில் வாழ்ந்த ஞானி ஆவார். இவர் இங்கே உள்ள அழகு முத்து ஐயனார் ஆலயத்தின் அருகில் ஜீவசமாதி அடைந்த இடத்தில் ஒரு தனிக்கோவில் கிராம மக்கள் கட்டியுள்ளனர்.
இடம்
தனிவாழ்க்கை
அழகர் சித்தர் என்று அறியப்படும் இவர் சில காலங்களுக்கு முன் தற்போதைய புதுச்சேரியை அடுத்த ஏம்பலம் கிராமத்தின் தெற்கு பகுதியில் இருக்கும் தென்னம்பாக்கத்தை அடைந்து இங்கே இருந்த கிராம தேவதையான ஐயனார் கோவிலுக்கு அருகில் இருந்த சோலையில் தங்கி தியானம் செய்தார். பின்னர் அப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு அருளுரை வழங்கியும், மருத்துவ உதவிகள் செய்தும், பூச்சி கடிகளுக்கு மந்திர வித்தை மூலம் சிகிச்சை அளித்தும் வாழ்ந்து வந்தார்.
சமாதி
கிராம தேவதையான ஐயனார் கோவிலுக்கு அருகில் இருந்த கிணற்றில் ஊர் மக்கள் முன்னிலையில் மாயமாய் மறைந்து ஜீவ சமாதி அடைந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது அந்த கிணற்றின் மேல் ஆலயம் எழுப்பி மக்கள் வழிபடுகின்றனர். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தின் முதல் திங்கள் கிழமை ஒரு விழாவை ஒருங்கிணைத்து சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மற்றவை
அழகர் சித்தர் கோவிலில் வேண்டுதலின் அடிப்படையில் சிமெண்டில் பொம்மைகள் செய்து அற்பணித்து, பராமரிப்பது வழக்கமாக உள்ளது. கோவிலை சுற்றியுள்ள சோலையில் சிற்பங்கள் வைக்கப்படுகின்றன. வருட பூஜையின்போது புது வர்ணம் பூசி வழிபாடு செய்கிறார்கள்.
உசாத்துணை
- அழகர் சித்தர் பற்றி தி ஹிந்து
- Azhagar Siddhar and Azhagu Muthu Ayyanar Temple Thennampakkam Cuddalore
- அழகுசித்தர் ஆலயம் -சாந்திப்பிரியா கட்டுரை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.