இரவுநீடு பருவரல்(கைக்கிளை)
இரவுநீடு பருவரல் புறப்பொருளில் அமைந்த கைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. காதல் கொண்ட பெண் இரவு நீண்டதாகயிருக்கிறதெனத் துன்புறுதலைக் கூறுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தனிமையில் வாடும் தலைவி இரவில் பெரிதும் மனம் மயங்கினேன் என நெகிழ்ந்து சொல்லுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
புலம்பொடு வைகும் பூங்குழை கங்குல்
கலங்கினேன் பெரிது எனக் கசிந்து உரைத்தன்று(கொளு 15.8)
வெண்பா
பெண்மேல் நலிவு பிழை என்னாய் பேதுறீஇ
விண்மேல் இயங்கும் மதி விலக்கி மண்மேல்
நினக்கே செய்பகை எவன்கொல்
எனக்கே நெடியர் வாழிய இரவே (301)
பொருள்: பெண்ணுக்குத் துன்பம் செய்வதைத் தவறு என்று எண்ணாய்; அறிவற்று வானத்து நிலவைப் போகாதபடி செய்துவிட்டாய்; நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்?; எனக்கு ஏன் இவ்வளவு நீண்டதாக இருக்கிறாய், இரவே !
உசாத்துணை
கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.