under review

மதுரைக் காருலவியங் கூத்தனார்

From Tamil Wiki

மதுரைக் காருலவியங் கூத்தனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரை, காருலவியம் என்ற ஊரில் பிறந்தார். நாடகத்தமிழான கூத்தர் தொழில் செய்து வந்தார்.

இலக்கிய வாழ்க்கை

மதுரைக் காருலவியங் கூத்தனாரின் பாடல் ஒன்று நற்றிணையில்(325) உள்ளது. கவிந்த தலையும், பருத்த மயிரும் கொண்ட ஆண்கரடி இரை தேடிக்கொண்டு இரவில் சென்று கறையானை உண்பதற்காகக் கறையான் புற்றைக் கிண்டும்போது, புற்றிலிருந்து பாம்பு வரக்கண்டு, தன் நகங்களால் ஒதுக்கித் தள்ளும் என்ற பாலையின் சித்திரம் காண்பிக்கப்படுகிறது.

பாடல் நடை

  • நற்றிணை 325: பாலை; தோழி செலவு அழுங்குவித்தது.

கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை
இரை தேர் வேட்கையின் இரவில் போகி,
நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த
அர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யென
முர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும், 5
ஊக்கு அருங் கவலை நீந்தி, மற்று- இவள்
பூப்போல் உண்கண் புது நலம் சிதைய,
வீங்கு நீர் வாரக் கண்டும்,
தகுமோ?- பெரும!- தவிர்க நும் செலவே.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.