உறையூர் மருத்துவன் தாமோதரனார்
From Tamil Wiki
உறையூர் மருத்துவன் தாமோதரனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய ஐந்து பாடல்கள் அகநானூற்றிலும், புறநானுற்றிலும் உள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
இயற்பெயர் தாமோதன். உறையூரில் பிறந்தார். மருத்துவர்.
இலக்கிய வாழ்க்கை
இவர் பாடிய ஐந்து பாடல்கள் அகநானூற்றிலும் (133, 257), புறநானுற்றிலும்(60, 170, 321) உள்ளன. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனையும், பிட்டங்கொற்றனையும் பாடியுள்ளார்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவன்: உறையூரை ஆண்டவன். குராப்பள்ளியில் உயிர் துறந்தான். பிற அரசர்களுடன் நட்பு கொண்டிருந்தான். பாண்டி வேந்தன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதி
- இருள்பிளப்பான்: உடுக்கு அடிக்கும் வேலனை இவர் 'இருபிறப்பாளன்' என்று குறிப்பிடுகிறார். எளிய மனிதனாக உள்ளபோது அவனுக்கு உள்ளது ஒரு பிறப்பு. வீட்டு விழாவில் அகத்திணைப் பாடல்களில் தலைவிக்கு முருகயரும்போது மற்றொரு பிறப்பு. இப்படி ஒருவனே இரு பிறப்பாளனாக மாறுகிறான். பார்ப்பாரை இருபிறப்பாளன் என்பது வழக்கம். பூணூல் அணிவதற்கு முன் ஒரு பிறப்பு. பூணூல் அணிந்த பின் மறுபிறப்பு.
பாடல் நடை
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: வணிகரிற் புலவர்கள்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-9
- சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை: தமிழ் இணைய கல்விக் கழகம்
- உறையூர் மருத்துவன் தாமோதரனார்: tamilvu
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.