சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார்
காசி விஸ்வநாத முதலியார் (பிறப்பு : 1806; இறப்பு; 1871) உடுமலைப்பேட்டையில் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றியவர். பிரம்ம சமாஜக் கொள்கைகளில் ஆர்வமுடையவர். டம்பாச்சாரி விலாசம், தாசில்தார் நாடகம், பிரம்ம சமாஜ நாடகம் போன்றவை இவர் இயற்றிய நூல்களாகும்.
பிறப்பு, கல்வி
காசி விஸ்வநாத முதலியார், 1806-ல், சென்னை சைதாப்பேட்டையில், தியாகராஜ முதலியாருக்கு மகனாகப் பிறந்தார். செல்வ வளம் மிக்கக் குடும்பம். உயர் கல்வி கற்ற இவர், தமிழோடு தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார்.
தனிவாழ்க்கை
உயர் கல்வி கற்றதால் இவருக்கு அரசுப் பணி கிடைத்தது. சித்தூர் மாவட்ட நீதிமன்றம், கடப்பை மாவட்ட நீதிமன்றம் போன்றவற்றில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். பின் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று பெல்லாரி மாவட்ட நீதிமன்றத்தில் சில ஆண்டுகாலம் பணியாற்றினார். 1853-ல் கோயமுத்தூர் மாவட்டம் உடுமலைப்பட்டையில் நீதிபதியாகப் பணிபுரிந்தார். 1868-ல் அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று சென்னைக்கு வந்தார்.
இலக்கிய வாழ்க்கை
மக்கள் சிலரிடையே நிலவி வந்த ஒழுக்கக் கேடுகளைக் கண்டு மனம் வருந்திய விஸ்வநாத முதலியார், அவர்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த விரும்பினார். அதற்கான கருவியாக நாடகத்தைப் பயன்படுத்த நினைத்தார். முதல் நாடகமாக ‘டம்பாச்சாரி விலாசம்’ என்ற நாடக நூலை எழுதினார். அது 1867-ல் வெளியானது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.