ப. சிவகாமி
ப. சிவகாமி (பிறப்பு:1957) எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
தனிவாழ்க்கை
இவர் இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றினார். தமிழ்நாட்டில் தூத்துக்குடி, வேலூர் மாவட்ட ஆட்சியாளராகப் பணியாற்றினார். தொழிலாளர் துறை கூடுதல் செயலாளராகவும் சுற்றுலாத்துறை இயக்குநராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராகவும் பணியாற்றினார். 2009 முதல் இவர் முழுநேர அரசியலில் ஈடுபட்டார். மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டார்
இலக்கிய வாழ்க்கை
1985களில் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். பழையன கழிதல், ஆனந்தாயி போன்ற நாவல்களை எழுதினார். 1993இல் ’நாளும் தொடரும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. 1995 முதல் தமிழ் இலக்கிய இதழான ”புதிய கோடாங்கி”யில் கட்டுரை, சிறுகதைகள், விமர்சனங்கள் எழுதி வருகிறார்.
இலக்கிய இடம்
”உண்மைக்கு முன்னும் பின்னும் நாவலின் இலக்கிய முக்கியத்துவம் அது காட்டும் இரண்டு அம்சங்களால் ஆனது என்பது என் மதிப்பீடு. ஒன்று அது அதிகாரவர்க்கம் செயல்படும் விதத்தை நுட்பமாக சித்தரித்துக்காட்டுகிறது. அதன் உள்ளடுக்குகளையும் ஊடுபாவுகளையும் நாம் நம் அனுபவம்போல காணச்செய்கிறது. இரண்டு அதிகார அரசியலின் நேர் எல்லையில் ஒரு பெரும் இலட்சியவாதத்தை சுட்டிக்காட்டி நிற்கிறது. இவ்விரு கூறுகளாலும் அது முக்கியமான நாவல்” என ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.
நூல் பட்டியல்
நாவல்கள்
- பழையன கழிதலும்
- ஆனந்தாயி
சிறுகதைத்தொகுப்பு
- நாளும் தொடரும்
பிற
- உண்மைக்கு முன்னும் பின்னும் (தன்வரலாற்றுநாவல்)
- குறுக்கு வெட்டு
- இப்படிக்கு உங்கள் யதார்த்தமுள்ள
- கடைசி மாந்தர்
- உடல் அரசியல்
உசாத்துணை
- ப. சிவகாமி: தென்றல்
- உண்மைக்கு முன்னும் பின்னும் நாவல் பற்றி ஜெயமோகன்