தமிழ்நெறி விளக்கம்
தமிழ்நெறி விளக்கம் ஒரு தமிழ் இலக்கண நூல். இது ஓர் உரைதருநூலாகும். இதன் வெகு சிறிய பகுதி மட்டுமே கிடத்துள்ளது. இதன் பொருளிலக்கணத்தின் ஒரு பகுதியாகிய அகப்பொருளின் களவியல் சார்ந்த 21 பாடல்கள் உட்பட மொத்தம் 25 பாடல்கள் மட்டுமே இப்போது கிடைத்துள்ளன. இந்நூல் இயற்றப்பட்ட காலம் 9 -ஆம் நூற்றாண்டு.
இந்நூலில் தற்போது கிடைத்துள்ள பகுதி முழுதும் ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டுள்ளது. இறையனார் களவியல் என்னும் அகப்பொருள் நூலைச் சுருக்கி எழுதியதே இந்த நூல் என்று சொல்லப்படுகிறது. இறையனார் களவியல் நூலின் 60 பாடல்களில் சொல்லப்பட்டவை இதிலே 25 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளன.
மிகவும் சிதைந்த நிலையில் கிடைத்த ஓர் ஏட்டுப் பிரதியிலிருந்து இந்த 25 பாடல்களையும் உ. வே. சாமிநாதையர் 1937-ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார். இறையனார் களவியல் உரை, யாப்பருங்கல விருத்தி உரை, சிலப்பதிகார அரும்பத உரை, தொல்காப்பிய இளம்பூரணர் உரை, களவியல் காரிகை உரை ஆகிய நூல்கள் தமிழ் நெறி விளக்கத்திலிருந்து பாடல்களை மேற்கோளாகப் பயன்படுத்தி உள்ளன.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.