சீரங்கநாயகியார் ஊசற்றிருநாமம்
சீரங்கநாயகியார் ஊசற்றிருநாமம் அஷ்டபிரபந்தத்தில் இடம்பெறும் ஊசல் என்னும் சிற்றிலக்கியம். கோனேரிராஜனைய்யங்காரால் இயற்றப்பட்டது.
ஆசிரியர்
சீரங்கநாயகியார் ஊசற்றிருநாமம் இயற்றியவர் கோனேரியப்பனையங்கார். இவர் அஷ்ட பிரபந்தம் இயற்றிய பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் பெயரர் என்பது தவிர அவரைப் பற்றிய வேறு தகவல்கள் அறியவரவில்லை.
நூல் அமைப்பு
சீரங்கநாயகியாரைச் சூழ்ந்துள்ளோர் இப்பாடலில் குறிக்கப்படுகின்றனர். முதலில் பத்துவகைக் கொத்தினர் காட்டப்படுகின்றனர். உடையவர் சீரங்கம் திருக்கோயில் நிருவாகத்தைத் திறம்பட நிர்வகிக்கப் பத்துக் கொத்துகளை நியமனம் செய்து அருளினார். அவர்களைப் பற்றிக் “கோயில் ஒழுகு” நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்நூலாசிரியரின் பாட்டனாரான பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் எழுதியுள்ள “சீரங்க நாயகர் ஊசல்” நூலின் 22-ஆம் பாடலிலும் இதைக் காணமுடிகிறது.
பாடல் நடை
தருக்குடனே உமதுதிரு வுளத்துக் கேற்கத்
தங்கள்தங்கள் பணிவிடைகள் தலைமேற் கொண்டு
வருக்கமுடன் பத்துவகைக் கொத்து ளோரும்
மற்றுமுள்ள பரிகரமும் வந்து சூழ
அருக்கனென முடிவிளங்க அழகு வீற
அண்டர்கள் பூமழை பொழிய அடியார் போற்ற
செருக்கி விளையாடி உகந்து ஆடிர் ஊசல்
சீரங்கநாயகியார் ஆடிர் ஊசல்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.