being created

முதலாழ்வார்கள்

From Tamil Wiki

பன்னிரு ஆழ்வார்களில் பொய்கையாழ்வார், பூததாழ்வார், பேயாழ்வார் மூவரும் முதலாழ்வார்கள் என அழைக்கப்படுகிறார்கள். திருக்கோவலூரில் ஓர் வீட்டின் இடைகழியில் இவர்களின் சந்திப்பில் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிறந்தது.

மூவரின் பிறப்பு

முதலாழ்வார் மூவரும் சித்தத்திரி வருடம் ஐப்பசி மாதம் அடுத்தடுத்த தினங்களில் பிறந்ததாகக் கூறப்படுகிறது. மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தின மாலை இதைக் குறிப்பிடுகிறது.மூவருமே தம் பெற்றோரால் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள். 'அயோநிஜர்கள்' (கருவறையிலிருந்து பிறக்காதவர்கள்) என அழைக்கப்பட்டவர்கள்.

ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம்” இவை

ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்

பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்

தேசுடனே தோன்று சிறப்பால்!

பொய்கையாழ்வார் திருமாலின் திருக்கரத்தில் உள்ள சங்கின் அம்சமாக ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில், பொற்றாமரை மலரில் அவதரித்தார்.

மறு நாள் அவிட்ட நட்சத்திரத்தில் திருமாலின் கதாயுதத்தின் அம்சமாக மாமல்லபுரத்தில் நீலோற்பல மலரில் (குருக்கத்தி மலரில்) பூதத்தாழ்வார் அவதரித்தார்.

அதற்கும் அடுத்த நாள் சதய நட்சத்திரத்தில் பெருமாளின் வாளின் அம்சமாய் மயிலாப்பூரில் உள்ள கிணற்றில் செவ்வல்லி மலரில் பேயாழ்வார் அவாதரித்தார்

திருக்கோயிலூரில் சந்திப்பு

பாட்டுக்கு உரிய பழையவர் மூவரைப் பண்டு ஒருகால்

மாட்டுக்கு அருள் தரும் மாயன் மலிந்து வருத்துதலால்

நாட்டுக்கு இருள்செக நான்மறை அந்தி நடை விளங்க

வீட்டுக்கு இடைகழிக்கே வெளிகாட்டும் அம்மெய்விளக்கே

தேசிக பிரபந்தம்













🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.