under review

காரி கிழார்

From Tamil Wiki

காரி கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

காரி கிழாரின் காரி எனும் ஊர் தற்போதைய ராமகிரி என்றழைக்கப்படும் ஊர் என்று உ.வே.சா கூறினார். சிவனை வழிபடுபவர், வைதீகவொழுக்கினர் என்பது இவரின் பாடல்கள் வழி அறியலாம். காரி என்னும் சொல் நஞ்சு, நஞ்சுண்ட சிவபெருமானையும் குறிக்கும். இவரது பெயர் சிவபெருமானை அழைக்கும் பெயர் என்றும் கூறுவர்.

இலக்கிய வாழ்க்கை

இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் ஆறாவது பாடலாக உள்ளது. புலவர் அரசர்க்கு நன்னெறிகளாகக் கூறும் செய்திகளைப் பொருண்மொழிக் காஞ்சித்துறையில் செவியறிவுறூஉ பகுதியில் உள்ளது. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிய பாடல். 'தண்டா ஈகைத் தகைமாண் வழுதி' என இவரின் கொடைத்தன்மையைக் கூறினார்.

பாடல் நடை

  • புறநானூறு: 6

வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்,
கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது
ஆனிலை உலகத் தானும், ஆனாது,
உருவும் புகழும் ஆகி, விரிசீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க!

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.