அகோர முனிவர்
From Tamil Wiki
அகோர முனிவர் (பொ.யு. 17-ஆம் நூற்றாண்டு) அகோரதேவர். சைவத் துறவி, திருவாரூர் ஆலயத்தில் அபிஷேக கட்டளையை உருவாக்கியவர். சைவ புராணங்களை எழுதியவர்
வாழ்க்கை
திருவாரூர் ஆலயத்தில் அபிஷேகக் கட்டளை, அன்னதானக் கட்டளை ஆகியவற்றை நடத்தியவர். இலக்கணவிளக்கம் நூலின் ஆசிரியர் வைத்தியநாத தேசிகர் இவருடைய மாணவர், பொ.யு. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
நூல்கள்
- கும்பகோணம் புராணம்
- திருக்கானப்பேர் புராணம்
- வேதாரணிய புராணம்
✅Finalised Page