சிவப்பிரகாச பண்டிதர்
From Tamil Wiki
Revision as of 00:18, 17 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected errors in article)
சிவப்பிரகாச பண்டிதர் (1864-1916) ஈழத்து தமிழ்ப்புலவர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
சிவப்பிரகாச பண்டிதர் இலங்கை யாழ்ப்பாணம் நீர்வேலியில் சங்கரபண்டிதருக்கு 1864-ல் பிறந்தார். தந்தையிடம் தொல்காப்பியம், நன்னூல் முதலிய தமிழ் இலக்கண இலக்கியங்கள், இரகுவம்சம், மாகம் முதலிய சமஸ்கிருத காவியங்களையும், முக்த போதம் ஆசுபோதம் முதலிய சமஸ்கிருத வியாகரணங்களையும் கற்றார்.
இலக்கிய வாழ்க்கை
சிவப்பிரகாச பண்டிதர் கவி புனையும் ஆற்றல் கொண்டிருந்தார். 'திருச்செந்தூர்ப் புராணவுரை', 'சிவானந்தலகரி தமிழுரை' ஆகிய உரைகள் எழுதினார். 'பாலபாடம்', 'பாலாமிர்தம்' முதலிய நூல்கள் இயற்றினார். மொழிபெயர்ப்புக்கள் செய்தார்.
மறைவு
சிவப்பிரகாச பண்டிதர் 1916-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- திருச்செந்தூர்ப் புராணவுரை
- சிவானந்தலகரி தமிழுரை
- பாலபாடம்
- பாலாமிர்தம்
உசாத்துணை
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
13-Mar-2023, 18:40:09 IST