under review

தெய்வசிகாமணிப் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 14:05, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தெய்வசிகாமணிப் பிள்ளை (பொ.யு.1804-1846) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

தெய்வசிகாமணிப் பிள்ளை பொ.யு. 1804-ம் ஆண்டு திண்டுக்கல்லில் வேளாளர் சாதியில் கிறிஸ்தவ மதத்தில் வேத தேசிகரான அந்தோணிமுத்துவுக்கு மகனாகப் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

தெய்வசிகாமணிப் பிள்ளை இளமையில் 'இன்பமணிமாலை', 'ஸ்தோத்திரக்கும்மி' என்னும் இரு பாடல்களை இயற்றினார். கொழும்பு சைமன் காசிச்செட்டி நடத்திய 'உதயாதித்தன்' என்ற பத்திரிக்கையில் இவை பிரசுரமாயின.

மறைவு

தெய்வசிகாமணிப் பிள்ளை 1846-ல் காலமானார்.

நூல்பட்டியல்

  • இன்பமணிமாலை
  • ஸ்தோத்திரக்கும்மி

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Nov-2023, 07:18:36 IST