under review

வேங்கடத்துறைவான் கவிராயர்

From Tamil Wiki
Revision as of 16:24, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வேங்கடத்துறைவான் கவிராயர் வைணவ ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் மீது மாறன்கோவை (526 பாடல்கள்) என்ற நூலை இயற்றியவர்.

பிறப்பு, கல்வி

வேங்கடத்துறைவான் கவிராயர் முந்நூறு ஆண்டுகளுக்கு முன் ஆழ்வார்திருநகரியில் பிறந்தவர்.

தனிவாழ்க்கை

வேங்கடத்துறைவான் கவிராயர் ஆழ்வார்திருநகரி ஆழ்வார் கோவிலுக்குத் திருமுழுக்கு செய்தவர்.

நூல்

வேங்கடத்துறைவான் கவிராயர் நம்மாழ்வார் மீது பற்று கொண்டவர். அதனால் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவர் நம்மாழ்வார் மீது இயற்றிய மாறன் அகப்பொருள் என்ற நூலை தழுவி மாறன்கோவை' என்ற நூலை இயற்றினார். மாறன்கோவை 526 பாடல்கள் கொண்டது. மாறன்கோவை கோவை பூளைமேடு மு. வேணுகோபாலசாமி நாயுடுவால் பரிசோதிக்கப்பட்டு செங்கல்வராயநாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடத்தில் 1906-ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2023, 18:30:46 IST