being created

ஜெயன் கோபாலகிருஷ்ணன்

From Tamil Wiki
Revision as of 07:22, 20 December 2023 by Ramya (talk | contribs)

ஜெயன் கோபாலகிருஷ்ணன் (பிறப்பு: ஜூலை 3, 1984) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஜெயன் கோபாலகிருஷ்ணன் குமரி மாவட்டம் முருங்கவிளை எனும் ஊரில் கோபாலகிருஷ்ணன், லெட்சுமி இணையருக்கு ஜூலை 3, 1984இல் பிறந்தார். உடன்பிறந்தவர் தம்பி பெருமாள். நாகர்கோயில் எஸ்.எல்.பி அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். தெ.தி.இந்துகல்லூரியில் கணிப்பொறி அறிவியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். கணினி பயன்பாட்டியலில் (M.C.A) முதுகலைப்பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ஜெயன் கோபாலகிருஷ்ணன் ரதிமலரை அக்டோபர் 28, 2012-இல் திருமணம் செய்து கொண்டார். மகள் வெண்ணிலா, மகன் ஆதன். மென்பொறியாளராக சென்னையில் பணியாற்றுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

ஜெயன் கோபாலகிருஷ்ணனின் முதல் சிறுகதை ”அப்பாவின் குரல்” 2013-இல் ஜெயமோகன் தளத்தில் வெளியானது. முதல் சிறுகதைத்தொகுப்பு ”நின்றெரியும் சுடர்” யாவரும் பதிப்பகம் வெளியீடாக 2023-இல் வந்தது. யாவரும், வனம், கனலி, பதாகை ஆகிய இலக்கிய இணைய சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். தன் இலக்கிய ஆதர்சங்களாக ஜெயமோகன், சுந்தர ராமசாமி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

சிறுகதைத்தொகுப்பு
  • நின்றெரியும் சுடர்

இணைப்புகள்

  • அப்பாவின் குரல் – ஜெயன் கோபாலகிருஷ்ணன்: 2013: jeyamohan.in



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.